தலைப்பு உங்களிடம்

•July 2, 2009 • Leave a Comment

அவள் வருகையின் மணம்

கண்டுபிடித்துவிட்டது போலும்,

துடிப்பதை நிறுத்திவிட்டு எட்டிப்பார்க்கிறது

என் இருனூறு கிராம் இதயக் கணிணி..

இனிய பயணம்

•June 21, 2009 • 2 Comments
காற்றின் நாதத்திற்கு நடனமாடும் 
கார் கூந்தல்,
கண்ணைச் சிமிட்டினால்
வெள்ளி மின்னல்கள்,
மாம்பழக் கன்னம்,
சிரித்தால் சிதறும் 
முத்துக்கள்.
என எதுவும் இல்லாமல்,
ஓடும் ரயில் வண்டிக்கு டாடா காட்டும்
பக்கத்து வீட்டு வாண்டு போல இருந்தாள்.!
நான் அமர்ந்திருந்த ‍- ஜன்னலோர‌
இருக்கையை தன்னுடையதென ஆக்கிர‌மித்துக் கொண்டாள்
துறுதுறுவென ஓடித்திரிந்த அவளிடம் 
18 வயதுக்கான பயம் இல்லை.
மொரப்பூர் ரயில் நிலையம்‍ – பேசலாமா?
ஜோலார்பேட்டை – பதில் பேசாவிட்டால்?
ஆம்பூர் – பேசவேண்டும்,
காட்பாடி – எப்படி ஆரம்பிக்கலாம்? பெயர்?
50ல் ஓடிக்கொண்டிருந்த ரயிலின் வேகம் கூடியது.
எப்படி ஓடினாலும் 6 மணி நேரத்துக்கு மேல் ஓடாது 
எங்க ஊர் ரயில் வண்டி..
சென்னை சென்ரல் – ஹலோ..!!
காதில் விழவில்லை போலும்.
அதிர்ஷ்டத்தை நொந்துகொண்டு
என் வழி நடக்கலானேன்.
எக்ஸ்க்யூஸ் மி,.!
……………..ஹை வோல்டேஜ்
சோழிங்கநல்லூர் போகனும்
………………டமால்.!!
ப்ராட்வேக்கு எப்டி போகனும்.
……………..வெடித்துச் சிதறியது 1000 வாட்ஸ் பல்பு ..!!!
அவள் கையை பிடிக்காத குறைதான்,
ப்ராட்வேயில் பஸ் ஏற்றிவிட்டேன்.
போன் நம்பர் கொடுத்து
மினு என்றாள் மின்மினி.
மூணு என்று அவள் பெயரை பதிவு செய்துகொண்டேன்..!!
இனிய பயணம் என்று நாட்குறிப்பில் கிறுக்கி வைத்தேன்.

 

காற்றின் நாதத்திற்கு நடனமாடும் 

கார் கூந்தல்,

கண்ணைச் சிமிட்டினால்

வெள்ளி மின்னல்கள்,

மாம்பழக் கன்னம்,

சிரித்தால் சிதறும் 

முத்துக்கள்.

 

என எதுவும் இல்லாமல்,

ஓடும் ரயில் வண்டிக்கு டாடா காட்டும்

பக்கத்து வீட்டு வாண்டு போல இருந்தாள்.!

நான் அமர்ந்திருந்த ‍- ஜன்னலோர‌

இருக்கையை தன்னுடையதென ஆக்கிர‌மித்துக் கொண்டாள்.

துறுதுறுவென ஓடித்திரிந்த அவளிடம் 

18 வயதுக்கான பயம் இல்லை.

 

மொரப்பூர் ரயில் நிலையம்‍ – பேசலாமா?

ஜோலார்பேட்டை – பதில் பேசாவிட்டால்?

ஆம்பூர் – பேசவேண்டும்,

காட்பாடி – எப்படி ஆரம்பிக்கலாம்? பெயர்?

 

50ல் ஓடிக்கொண்டிருந்த ரயிலின் வேகம் கூடியது.

எப்படி ஓடினாலும் 6 மணி நேரத்துக்கு மேல் ஓடாது 

எங்க ஊர் ரயில் வண்டி..

 

சென்னை சென்ரல் – ஹலோ..!!

காதில் விழவில்லை போலும்.

அதிர்ஷ்டத்தை நொந்துகொண்டு

என் வழி நடக்கலானேன்.

 

எக்ஸ்க்யூஸ் மி,.!

ஹை வோல்டேஜ் !!………………………………………………..

சோழிங்கநல்லூர் போகனும்

டமால் !!………………………………………………..

ப்ராட்வேக்கு எப்டி போகனும்.

வெடித்துச் சிதறியது 1000 வாட்ஸ் பல்பு !!!…………………………………………….

 

அவள் கையை பிடிக்காத குறைதான்,

ப்ராட்வேயில் பஸ் ஏற்றிவிட்டேன்.

 

போன் நம்பர் கொடுத்து

மினு என்றாள் மின்மினி.

மூணு என்று அவள் பெயரை பதிவு செய்துகொண்டேன்..!!

 

இனிய பயணம் என்று நாட்குறிப்பில் கிறுக்கி வைத்தேன்.

 

 

தலைப்பு இறுதியில்.

•May 23, 2009 • Leave a Comment

 

முன்னத்தங்கால் இரண்டில் ஒன்று

சாதிக்காரன்கள் பரிசளித்தது.

மற்றொன்று ,

பங்காளிகள் பிரித்துக் கொடுத்தது.

பின்னத்தங்கால் இரண்டில் ஒன்று

பிள்ளைகளின் அன்பளிப்பு.

மற்றொன்று , 

சொந்த ‘ செலவில் ‘ தயாரானது..

தலைவர் தாத்தாவின் நாற்காலி..!!

முன்னத்தங்கால் இரண்டில் ஒன்று
சாதிக்காரன்கள் பரிசளித்தது.
மற்றொன்று ,
பங்காளிகள் பிரித்துக் கொடுத்தது.
பின்னத்தங்கால் இரண்டில் ஒன்று
பிள்ளைகளின் அன்பளிப்பு.
மற்றொன்று , 
சொந்த செலவில் தயாரானது..
தாத்தாவின் நாற்காலி..!!

நாய் – பச்சோந்தி நாடகம்

•May 20, 2009 • Leave a Comment

 

அதிகாரம் என்றொரு மணி கட்டிய‍
நாய் ஒன்று
புலியைப் பூனை யென 
நினைத்துக் குரைத்துக் கொண்டிருந்தது.
பூனை ஒரு நாள் புலியாய்க்
குதறியதைத் தாள முடியாமல்,
பச்சோந்தியிடம் உதவி கேட்கலாம் என‌
இந்தியா வந்தது,
பச்சைத் தமிழன் என்றொரு வேடமிட்ட‌
பச்சோந்தியிடம்,
தான் இயற்றும் நாடகத்தில் நடிக்கும் படி
கேட்டுக் கொண்டது.
இத் தமிழன், தலை சிறந்த நடிகன்.
இவன் அனுப்பி வைத்த பற்கள்
புலிகளைப் பதம் பார்த்தது.
அப்பாவி ஆடு மாடுகளையும் 
பதம் பார்த்தது..!!
புலியின் காயத்தைக் கண்டு 
கண்ணீர் விடுவதாய் அறிவித்துக் கொண்டது
ப‌ச்சோந்தி..!
வாயசைத்தது மட்டுமே நாயின் வேலை.,
கடித்துக் குத்றியதெல்லாம்
பச்சோந்தியின் பாழும் பற்கள்..!
தாயின் கைகளால்
அடிபட்ட பிள்ளையின்
முதுகில்
தேர்தல் ரணத்தின் அடயாளங்கள்..
எந் நாளும் மறவா,
ஆறாத் தளும்பாய்…!
கைச் சின்னம் கால் சின்னம்
எல்லச் சின்னமும்
ஆங்காங்கே சிதறுண்டு கிடக்கின்றன.
இந்தத் தேர்தல் நாடகத்தின் முடிவு
‘சுபம்’ல்லை..!!

அதிகாரம் என்றொரு மணி கட்டிய‍

நாய் ஒன்று

புலியைப் பூனை யென 

நினைத்துக் குரைத்துக் கொண்டிருந்தது.

பூனை ஒரு நாள் புலியாய்க்

குதறியதைத் தாள முடியாமல்,

பச்சோந்தியிடம் உதவி கேட்கலாம் என‌

இந்தியா வந்தது,

பச்சைத் தமிழன் என்றொரு வேடமிட்ட‌

பச்சோந்தியிடம்,

தான் இயற்றும் நாடகத்தில் நடிக்கும் படி

கேட்டுக் கொண்டது.

இத் தமிழன், தலை சிறந்த நடிகன்.

இவன் அனுப்பி வைத்த பற்கள்

புலிகளைப் பதம் பார்த்தது.

அப்பாவி ஆடு மாடுகளையும் 

பதம் பார்த்தது..!!

 

புலியின் காயத்தைக் கண்டு 

கண்ணீர் விடுவதாய் அறிவித்துக் கொண்டது

ப‌ச்சோந்தி..!

 

வாயசைத்தது மட்டுமே நாயின் வேலை.,

கடித்துக் குதறியதெல்லாம்

பச்சோந்தியின் பாழும் பற்கள்..!

 

தாயின் கைகளால்

அடிபட்ட பிள்ளையின்

முதுகில்

எந் நாளும் மறவா,

ஆறாத் தளும்பாய்…!

தேர்தல் ரணத்தின் அடயாளங்கள்..

 

கைச் சின்னம் கால் சின்னம்

எல்லச் சின்னமும்

ஆங்காங்கே சிதறுண்டு கிடக்கின்றன.

 

இந்தத் தேர்தல் நாடகத்தின் முடிவு

‘சுபம்’ இல்லை..!!

எந்தமிழனுக்கேன் இந்த வன்கொடுமை..??

•May 19, 2009 • 1 Comment

அலுமினியம் போர்த்திய பாஸ்பரங்களை

உருளை வடிவில்,

சீங்களச் சிப்பாய்கள்

ஒரு சேர வழியனுப்பிக் கொண்டிருந்தனர்.

 

கண்ணைக் கூசும் வெளிச்சம்‍ – வெப்பம்

கண் மூடித்திறந்தால்,

கரிக்கட்டையாய் என்னுடன் சிலர்.

 

பிணங்களுக் கடியில் – உயிருள்ள‌

பிணமாய் நானும்.!!.

 

புரியாத மொழியில் கத்திக்கொண்டு

சீருடைச் சிப்பாய்கள் – ஒரு இரும்பு யானையை .

உருட்டி வந்தனர்.

 

யானை துப்பிய கவலங்களி லொன்று

என் நெஞ்சய்க் கிழித்துச் சென்று,

பாரிய தொலைவிலுள்ள ஏரியில் விழுந்தது…!!

 

உள்ளங்கால் சில்லிட்டு ‍- உடலைச்

சிலுப்பிக் கொண்டெழுந்தேன்..

கனவிலும் பொறுத்துக்க முடியவில்லை – தாயே

தமிழ்த் தாயே..!

எந்தமிழனுக்கேன் இந்த வன்கொடுமை..??