திருநிறைச்செல்வி ப‌வ‌தாரிணிக்கு

இருள் சூழ்ந்த மாடத்தில்
ஒளிந்துகொண்டிருக்கும் ந‌ட்ச‌த்திர‌மே,
காலைப் ப‌னியுருக்கும் சூரிய‌க்கீற்றாம்
உன் ம‌ண‌வாள‌னிட‌ம் வெட்க‌மா?

மந்தாரை மலர் வருடும் தென்ற‌லாய் வ‌ருப‌வ‌னை
ம‌ன‌மொத்து வ‌ர‌வேற்கும் உன் வாயிற்ப‌டி.
ஜன்னல் கம்பிகளோடு உறவாடும்
திரை மேலே கடற்கரை குடியமர்ந்திருக்கும்.
ஆங்கே
கணவனின் வருகையை மோப்பம் பிடித்து
எட்டிப் பார்க்கும் உன் கண்கள்.
அவன் நுகர்ந்த காற்றின் வாசம் பறிக்க எத்தனிக்கும் உன் நாசி.

செவியைப் பிளக்கும் சத்ததிலும் கண்டுபிடித்துவிடுவான்
சங்கீதம் படைக்கும் உன் கொழுசொலியை.
நொடிக்கிருமுறை மன்னிப்பு கோறுவான்,
அனுதினமும் உடைக்கப்படும் கண்ணாடி வளையல்கற்கு.
 ‌

உன் திருமணம் போல் வேறு ஒரு நன்னாளும் உண்டா?
ஓரிலையில் இருவர் யாரதிகம் பெறுவர்?
சண்டை வேண்டாம்; சமாதானமும் வேண்டாம்
விட்டுக்கொடுக்க வேண்டாம்; எட்டிப்பறிக்கவும் வேண்டாம்
மாமியார் மெச்சும் மறுமகளே,
க‌விபாடும் காட்டுமைனாவே,
உன் ம‌துர‌மான‌ இசையில்
ம‌ணாள‌ன் ஆன‌ந்த‌க் கூப்பாடு போட‌ட்டும்.
தான் பெற்ற‌ வ‌ர‌ம் த‌ன் தார‌ம் என்று
ஊராரிடத்தில் உரைக்க‌ட்டும்.

Advertisement

~ by மதிஅருண் on September 22, 2010.

3 Responses to “திருநிறைச்செல்வி ப‌வ‌தாரிணிக்கு”

  1. Bhava is my dear most friend who is just married. God chosen a perfect groom. This is for her.

  2. Every time i read it, tears well up in my eyes….
    This is the most touching gift I’ve ever received…

    thanks machi.

    sorry for de late comment

  3. நிச்சயம் இதை விட சிறந்த பரிசு இல்லை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.